நேரம் மிகமிக முக்கியமானது! நேர மேலாண்மையை திட்டமிடுவது எப்படி?


காலம், நேரத்தின் அருமை பெரும்பாலானவர்களுக்கு தெரிவதில்லை. நாம் உயிரோடு இருக்கும் இந்த நேரம், இந்த நொடி அவ்வளவு முக்கியமானது. சர்வ சாதாரணமாக இருப்பதால், அதன் அருமை சிலருக்கு புரியாது. 2 நிமிட காலத்தில் ரயில் பயணத்தை கோட்டை விட்டவர்களும், ஏன் உயிரை விட்டவர்களும் உண்டு. தேர்வின் போது, வீட்டில் சிறிது கால தாமதமாக புறப்பட்டு, பேருந்தை தவற விட்டுவிட்டால், அந்த தேர்வு எழுத முடியாமல் போய்விடும்.


இது போன்ற சம்பவங்கள் 90 சதவீதம் பேருக்கு ஏற்படும். ஆனால், அந்த தவறை அவர்கள் உணர மாட்டார்கள். இனிமேல் எந்த விஷயத்திலும் கால தாமதம் செய்யக்கூடாது என்ற எண்ணம் இருக்க வேண்டும். தீ ஒரு தடவை சுட்டாலே போதும். அதன் பிறகு நெருப்பு அருகில் செல்ல மாட்டோம். அதே போல், ஒரு தடவை ஒரு தவறு செய்துவிட்டால், அதற்கு பிறகு விழிப்புணர்வுடன் இருந்து செயலாற்ற வேண்டும்.


அந்த வகையில், நேரம் எவ்வளவு இன்றியமையாதது, நேரத்தை பயனுள்ள வகையில் எப்படி மாற்ற வேண்டும், சரியான நேர மேலாண்மையை பின்பற்றுவது எப்படி என்பது பற்றி விரிவாக இங்கு பார்க்கலாம்.


நேர மேலாண்மை பயிற்சி (Time Management Practice)

இதுவரையிலான அனுபவம்:

முதலில் நீங்கள் இதுவரையில் நேரத்தை எப்படி செலவு செய்துள்ளீர்கள், எதற்கு எல்லாம் செலவு செய்துள்ளீர்கள் என்பதை பார்க்க வேண்டும். அதற்கு ஒரு வாரத்தில் நீங்கள் செய்யும் காரியங்களையும், அதற்கு நீங்கள் செலவு செய்யும் நேரத்தையும் கண்காணியுங்கள்.

காலையில் எப்பொழுது எழுகிறீர்கள் என்பதில் தொடங்கி, அன்றைய நாளில் என்னென்ன காரியங்கள் செய்கிறீர்கள் என அனைத்தையும் குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். வீட்டிலிருந்து அலுவலகத்துக்கு செல்கிறீர்கள் என்றால், அதற்கு பயண நேரம் எவ்வளவு என்பதையும் குறிப்பெடுங்கள். இதற்கென பிரத்யேகமாக மொபைல் ஆப் உள்ளது. அவற்றை பயன்படுத்தலாம். 

வார முடிவில்:

இவ்வாறு நீங்கள் எடுத்துள்ள குறிப்புகளை வாரக்கடைசியில் பாருங்கள். நீங்கள் எவ்வளவு நேரத்தை வீணாக்கியுள்ளீர்கள் என்பதை உணர முடியும். சராசரியாக ஒரு மனிதன் 2 முதல் 3 மணி வரையில் மொபைல் போனில் தேவையே இல்லாமல் செலவு செய்கிறான். இதை நீங்கள் குறிப்பெடுத்து, ஆய்வு செய்தால் மட்டுமே உங்களால் அறிய முடியும்.

அதே போல், ஒரு வேலை செய்யும் போது, நீங்கள் சரியாக வேலையை மட்டும் செய்கிறீர்களா, அல்லது கவனச்சிதறல் ஏற்பட்டு வேலையை தொய்வாக முடிக்கிறீர்களா என்பதை பார்க்க வேண்டும். 

திட்டமிடல் அவசியம்  (Planning) 

ஒவ்வொரு நாளும் நீங்கள் செய்யக்கூடிய வேலைகளை முடிந்த வரையில் முதல் நாளிலே திட்டமிட வேண்டும். சரியாக அந்த வேலைகளை, குறிப்பிட்ட நேரத்துக்குள்ளாக முடிக்க வேண்டும்.

முதலில் முக்கியமான அவசர வேலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து முதலில் செய்ய வேண்டும். அதனைத் தொடர்ந்து, முக்கியம் ஆனால் அவசரம் இல்லை என்ற வேலைகளை செய்ய வேண்டும். பின்னர், அவசரம் ஆனால் முக்கியமில்லை என்ற வேலையை செய்ய வேண்டும். கடைசியாக அவசரமும் இல்லை, முக்கியமும் இல்லை என்ற காரியங்களை செய்யவேண்டும்.

இவ்வாறு நீங்கள் செய்யும் வேலைகளை முதல் நாளிலே திட்டமிட்டு அதற்கு ஏற்றவாறு செயல்பட வேண்டும். குறிப்பாக நீங்கள் தெரிவு செய்துள்ள வேலைகளை எப்போது செய்ய வேண்டும், எவ்வளவு நேரத்தில் செய்ய வேண்டும் உள்ளிட்டவை திட்டமிட வேண்டும். 

கவனச்சிதறல், சோம்பல் (Lazziness)

எல்லாவற்றையும் திட்டமிடல் செய்தாவிட்டது. ஆனால், அதனை ஒழுங்காக பின்பற்றுகிறோமா என்பதில் தான் மொத்த பலனும் உள்ளது. நிறைய பேர் அழகாக திட்டமிட்டு, கால அட்டவணை எல்லாம் போட்டு விடுவார்கள். ஆனால், அந்த நேரம் வரும் போது அப்படியே கோட்டை விட்டு விடுவார்கள்.

இதற்கு கவனச்சிதறலும், சோம்பலும் முக்கிய காரணமாகும். முதலில் சோம்பல் இல்லாமல், நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளை தொய்வின்றி செய்ய வேண்டும். இரண்டாவது வேலை செய்யும் போது, வேறு எங்கேயும் மனம் செலுத்தக் கூடாது. அவ்வாறு கவனத்துடனும், சோம்பல் இல்லாமலும் காரியங்களை செய்யும் போது குறித்த நேரத்தில் வேலைகளை செய்து விட முடியும். 

சரியான குறிக்கோளும், நேர மேலாண்மையும்:

 நீங்கள் எந்த வேலையை செய்யப்போகிறீர்கள் என்று சரியான குறிக்கோள் வைக்க வேண்டும். அதே போல், அந்த வேலையை இந்த நேரத்துக்குள்ளாக செய்து முடிக்க வேண்டும் என்று நீங்களாகவே ஒரு Dead Line வகுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு காரியம் தடைபட்டு போனால், அதை தொடர்ந்து இருக்கும் அடுத்தடுத்த காரியங்களும் தடைபட்டு போகும். எனவே, நீங்கள் குறித்த நேரத்தில், உங்கள் வேலைகளை முடிப்பது மிகமிக முக்கியம்.

 

Shallow Work Vs Deep Work:

பொதுவாக நம் வேலைகளை நாம் செய்யக்கூடிய விதத்தில் இரண்டு வகை உள்ளது. ஒன்று Shallow Work, மற்றொன்று Deep Work. இவற்றில் Deep Work முறையிலேயே நாம் நம்மை பழகிக் கொள்ள வேண்டும்.

Shallow Work
என்பது நாம் நமது இஷ்டத்துக்கு வேலைகளைச் செய்வது. வேலை செய்யும் போது, சம்பந்தமே இல்லாமல் மற்றொரு காரியங்களில் ஈடுபடுவது. இவ்வாறு வேலை செய்தால், நமக்கு தொய்வு ஏற்படும். இதுவே Shallow Work ஆகும்.

Deep Work
என்பது வேலையில் மட்டும் முழு கவனம் செலுத்தி, அந்த வேலையை வெற்றிகரமாக முடித்துக் கொள்வது.

 

 

No comments:

Post a Comment